வழங்குபவர்: மௌலவி M.J.M. ரிஸ்வான் மதனி (அபூ நாதா) நிகழ்ச்சி: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும், 12வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம்: தஃவா நிலையத்தின் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 09.04.2010
அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,
மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தும் சோக நிகழ்வாகும். அல்லாஹ்வைத் தவிர உலகிலுள்ள அனைவரும் ஒருநாள் மரணக்கவே செய்வர். மரணமில்லாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் அந்த அல்லாஹ் ஒருவனே. அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. அல்ஹம்து லில்லாஹ். ஒரு மரணவீட்டிற்குச் செல்லும் நீங்கள் மௌலவிகள் கதாநாயகர்களாக இருப்பதை நிச்சயம் அவதானிப்பீர்கள்.