நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ‘தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது,

உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும்! நபி (ஸல்) அவர்கள், “ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார்கள்.

நாம் சாப்பிடும் பொருட்களில் இயற்கையிலேயே ஹராமானவை என்று இருக்கிறது! அதே நேரத்தில் சூழ்நிலைகளின் காரணமாக ஹராமானவையும் இருக்கிறது! பன்றியின் இறைச்சி எப்போதுமே ஹராம் தான்! ஒரு முஸ்லிம் மிக நிர்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர அந்த உணவை எப்போதுமே உண்ணலாகாது!