நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.

அளவற்றோனின் திருநாமம் போற்றி.. மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.

வல்லோனின் திரு நாமம் போற்றி மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு-பகல், காலை-மாலை, இன்று-நாளை… இது போன்று ‘இம்மை’ எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் ‘மறுமை’ என்பதாகும்.

அன்னை மேரி (அலை) உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட மேன்மையானவர்: – (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (Angels); மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்’  (என்று கூறினர்) (அல்-குர்ஆன் 3:42)

இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை (freedom-of-Religion): –  (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். சில நாட்களுக்கு முன்பு நான் கிறிஸ்தவ சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய பொறியியல் வல்லுனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் ” பைபிளில் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்துக்களும் மற்றும் பல முரண்பாடுகளும், தவறுகளும் காணப்படுகின்றனவே! நீங்கள் கிறிஸ்தவராக இருந்த சமயத்தில் இதைக் குறித்து உங்களுக்கு சந்தேகமே எழுந்ததில்லையா?  மேலும் உங்கள் மத குருமார்களிடமோ அல்லது பைபிளின் அறிஞர்களிடமோ இவைகளைப் பற்றி கேள்வி […]